1 34
இலங்கைசெய்திகள்

தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக முக்கிய தரப்புக்கு அழுத்தம்

Share

தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக முக்கிய தரப்புக்கு அழுத்தம்

பிரித்தானியாவுக்கு சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் வசிக்கும் இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர யவெட் கூப்பர் (Yvette Cooper) மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவில் வசிக்கும் இலங்கையர்களில், ஆண்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் பெண்கள் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு கனடாவுக்கு செல்வதற்காக படகில் புறப்பட்ட இலங்கையர்கள் சிலர், நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டு டியாகோ கார்சியா தீவுக்கு அழைத்து சென்றது.

தற்போது, 3 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் குறித்த தீவியேயே அடைபட்டுள்ளார்கள். அவர்கள் மிக குறைவான பரப்பளவு கொண்ட ஒரு கூடாரத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த தீவில் அனுபவிக்கும் கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் அங்கிருந்த 22 பேர் தவறான முடிவெடுத்து தம்மை தாமே மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடுக்கடலில் தீவில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர, உள்துறைச் செயலரான யவெட் கூப்பருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, அந்தத் தீவில் சிக்கித் தவிக்கும் சிலரையாவது பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு வெளியுறவுச் செயலரான டேவிட் லாம்மிக்கு (David Lammy) தீவின் ஆணையரான போல் கேண்ட்லர் (Paul Candler) என்பவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...