tamilni 65 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவது தொடர்பில் சர்ச்சை

Share

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவது தொடர்பில் சர்ச்சை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஊகம் வெளியிட்டுள்ளார்.

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமானால் முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு ரணில் வெளியிட்டுள்ள கருத்தின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவீர்கள் என்பதில் எந்தளவு நம்பிக்கையுடன் இருக்கின்றீர்கள் என்று இந்திய ஊடகம் ஒன்று ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்த ரணில், நான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமானால் முதலில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை மையப்படுத்தியே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற கருத்தை உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...