5 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தெரிவு குறித்து தேர்தல் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி

Share

ஜனாதிபதி தெரிவு குறித்து தேர்தல் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி

15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கிணங்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகளில் 50% வீதம் வேட்பாளர் ஒருவரினால் பெறப்படாத நிலையில், முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.

இதன்போது, 105,264 வாக்குகளை அனுரகுமார திசாநாயக்க பெற்றதோடு, சஜித் பிரேமதாச 167,867 வாக்குகளைப் பெற்றார். இதன்படி, அநுரகுமார திசாநாயக்கவின் மொத்த வாக்குகள் 5,740,179 ஆகவும், சஜித் பிரேமதாசவின் வாக்குகள் 4,363,035 ஆகவும் அதிகரித்தது.

தேர்தல் முடிவுகளின்படி, இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...