1 40
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அடிப்படை சுதந்திரம்: ஐ.நா குற்றச்சாட்டு

Share

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அடிப்படை சுதந்திரம்: ஐ.நா குற்றச்சாட்டு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய இலங்கை (Sri Lanka) தயாராகி வரும் நிலையில், நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறி்த்த விடயத்ததை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று (22) தெரிவித்துள்ளது.

ஆழமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டதன் பின்னர் தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ள இலங்கை, அதன் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த பேதிலும் அதனை இன்னும் செய்யாமல் இருக்கிறது என ஐ.நா. முகவரகம் நேற்று (22) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக, 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளை இலங்கை அரச விரிவுப்படுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

மற்றும், அரசாங்கம் அதன் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும், ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுருத்தல் என்பன தொடர்பாகவும் குறித்த அறிக்கை கவனஞ்செலுத்தியுள்ளது.

குறிப்பாக, இலங்கை நாடானது ஒரு முக்கிய தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்ற நிலையில், இவ்வாறானதொரு நிலை கவலையளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Turk) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...