இலங்கைசெய்திகள்

சிக்குவாரா கோட்டாபய! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

Share
28
Share

சிக்குவாரா கோட்டாபய! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பெருமளவு பணத்தை வீணடித்ததாகக் கூறப்படும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் குறித்து சிறப்பு விசாரணையை ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அரசாங்கம், அத்தகைய விசாரணைகளை நடத்தி, அந்த ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது அப்போதைய அரசாங்கங்களின் தலைவர்களிடமிருந்தோ பணத்தை மீட்டெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு விடயங்களை விசாரிக்க 14 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டின் பரிந்துரைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, உபாலி அபேரத்னவின் தலைமையில் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த நாட்டின் மக்களின் பணத்தில் மூன்றரை மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தப் பணத்தை ஆணைக்குழுவை நியமித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடமிருந்தோ அல்லது உபாலி அபேரத்ன உள்ளிட்ட மூன்று ஆணைய உறுப்பினர்களிடமிருந்தோ மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...