28
இலங்கைசெய்திகள்

சிக்குவாரா கோட்டாபய! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

Share

சிக்குவாரா கோட்டாபய! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பெருமளவு பணத்தை வீணடித்ததாகக் கூறப்படும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் குறித்து சிறப்பு விசாரணையை ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அரசாங்கம், அத்தகைய விசாரணைகளை நடத்தி, அந்த ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது அப்போதைய அரசாங்கங்களின் தலைவர்களிடமிருந்தோ பணத்தை மீட்டெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு விடயங்களை விசாரிக்க 14 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டின் பரிந்துரைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, உபாலி அபேரத்னவின் தலைமையில் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த நாட்டின் மக்களின் பணத்தில் மூன்றரை மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தப் பணத்தை ஆணைக்குழுவை நியமித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடமிருந்தோ அல்லது உபாலி அபேரத்ன உள்ளிட்ட மூன்று ஆணைய உறுப்பினர்களிடமிருந்தோ மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...