tamilni 75 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் கைகோர்க்க சஜித்துக்கு ஹரின் இறுதி அழைப்பு

Share

ரணிலுடன் கைகோர்க்க சஜித்துக்கு ஹரின் இறுதி அழைப்பு

பதவி ஆசையில் அலைந்து திரியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெட்கம் இல்லாமல் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இந்தப் பதவி ஆசையை மறந்துவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துச் செயற்படுமாறு அவருக்கு நான் இறுதி அழைப்பு விடுவதுடன் இறுதி எச்சரிக்கையையும் விடுகின்றேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுயநல அரசியல்வாதியான சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் மீண்டும் படுதோல்வியைச் சந்திப்பார். அத்துடன் அவரின் அரசியலும் முடிவுக்கு வரும் என்றும் அமைச்சர் ஹரின் சுட்டிக்காட்டினார்.

சஜித்துக்குப் பதவி ஆசை தீர வேண்டுமெனில் ரணிலுடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க முடியும் என்றும் ஹரின் அறிவுரை கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி வரலாற்று வெற்றியாகப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...