tamilni 75 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் கைகோர்க்க சஜித்துக்கு ஹரின் இறுதி அழைப்பு

Share

ரணிலுடன் கைகோர்க்க சஜித்துக்கு ஹரின் இறுதி அழைப்பு

பதவி ஆசையில் அலைந்து திரியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெட்கம் இல்லாமல் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இந்தப் பதவி ஆசையை மறந்துவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துச் செயற்படுமாறு அவருக்கு நான் இறுதி அழைப்பு விடுவதுடன் இறுதி எச்சரிக்கையையும் விடுகின்றேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுயநல அரசியல்வாதியான சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் மீண்டும் படுதோல்வியைச் சந்திப்பார். அத்துடன் அவரின் அரசியலும் முடிவுக்கு வரும் என்றும் அமைச்சர் ஹரின் சுட்டிக்காட்டினார்.

சஜித்துக்குப் பதவி ஆசை தீர வேண்டுமெனில் ரணிலுடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க முடியும் என்றும் ஹரின் அறிவுரை கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி வரலாற்று வெற்றியாகப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...