tamilnif 9 scaled
இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய சந்திப்பு

Share

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் சுயேட்சை எம்.பி.க்களாக செயற்படுவதாக அறிவித்த எம்.பி.க்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்களுடன் தம்மிக்க பெரேரா தமது அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடிய போதிலும் கலந்துரையாடலின் பெரும்பாலான தகவல்கள் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என அரசியல் வதந்திகள் நிலவி வரும் நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 69806d6b7f392
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மயிலிட்டியில் சோகம்: இராணுவ வாகனம் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று (02) திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த...

1770042557 images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை கடற்பரப்பில் மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியக் கடலோரக் காவல்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய மனிதாபிமானமற்ற...

f255d14dbc86150d596e80f2fed4b9cb
செய்திகள்உலகம்

பாம்புக்கடி: ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு உயிர் பறிபோகிறது – அதிர்ச்சியூட்டும் அறிக்கை!

உலகப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினத்தை (Neglected Tropical Diseases Day) முன்னிட்டு, Strike Out...

image ac09cfb2fa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெப்ரவரி 10 முதல் நிச்சயமாக 1,750 ரூபா சம்பளம்! – பிரதி அமைச்சர் பிரதீப் ஹட்டனில் உறுதி.

தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் எவ்விதப் போராட்டங்களுமின்றி...