tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

Share

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்தரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் தனியான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று ஜனாதிபதியின் பேஜெட் வீதி இல்லத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.

அதற்கமைய, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் வேறு பல தரப்பினரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதால், அதற்கு இணங்க முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி என்ற ரீதியில் தமது குழுவிற்கு தனியான கலந்துரையாடல் தேவை என தெரிவித்து அவர் கலந்துரையாடலை முடித்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...