24 66178ce21d4ae
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு தேரர் வழங்கியுள்ள ஆலோசனை

Share

ரணிலுக்கு தேரர் வழங்கியுள்ள ஆலோசனை

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickrenasinghe) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கென ஒரு ஆணையை பெற்றால், சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும் என சியாம் மஹா நிகாய பீடத்தின் கோட்டே சங்க சபையின் பிரதம பீடாதிபதி இட்டப்பன தம்மாலங்கார அனு நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தனவை சந்தித்த போதே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் பெற்ற வாக்குகள் மூலம் சீர்திருத்தங்களை ஜனாதிபதியினால் கொண்டு வரமுடியாது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) போன்ற வேறு வேட்பாளர்கள் இருப்பார்கள்.

எனினும், ரணில் விக்ரமசிங்கவே அரசியல்ரீதியாக மிகவும் முதிர்ச்சியடைந்த வேட்பாளராக இருப்பார் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...