2 23 scaled
இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Share

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

எதிர்வரும் ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும் போது, வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

கண்டி (Kandy) மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகள் காணப்படுவதுடன் கருத்து வேறுபாடுகளும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, “வரி உயர்வால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் கடினமான காலமாக இருந்தது.

இப்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது.முதன்மை வரவு செலவு உபரியை பராமரிக்க முடிந்தது.

இந்த நடவடிக்கை தனியார் துறையை பாதிக்கிறது. IMF (International Monetary Fund) உடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல் நடத்தப்படும். இதன் ஊடாக வளர்ச்சி ஏற்படுகிறது.

வரிச் சிக்கல்களைத் திருத்த IMF உடனான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன.

வரும் ஆண்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும். வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் போது அது நடக்கும். ஆனால் எமக்கு வாகனங்கள் இன்றி இருக்க முடியாது.

வருவாயில் பெரும் பகுதி வாகன வரி மூலம் வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என  தெரிவித்துள்ளார்.

கண்டி ஐக்கிய வர்த்தக முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதேசத்தின் சிங்கள, தமிழ், முஸ்லிம் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...