15
இலங்கைசெய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

Share

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்னவுக்கு, சட்டத்தரணிகள் சம்மேளனம் ஏகமனதாக அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக, இலங்கை சட்டத்தரணிகள் நியமித்த விசேட குழு, சட்டத்தரணிகள் சம்மேளனம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை ஆகியவற்றுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது

அதில் சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் கௌசல்ய நவரத்ன, எதிர்பார்த்த வெளிப்படைத் தன்மையைப் பேணத் தவறியதாகவும், எனவே அவர் வழிநடத்தும் அமைப்பின் நம்பிக்கையை, இது மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒப்பந்த ஏற்பாடுகள் மற்றும் வளவாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நவரத்ன முதன்மையாக செயற்பட்டுள்ளார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் நியமித்த விசேட குழு கண்டறிந்துள்ளது.

அத்துடன் ஜப்பான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நிதித் தாக்கங்கள் மற்றும் பொறுப்பான முறையில், அவை நடத்தப்படுவதை உறுதி செய்ய தவறியதற்காக நவரத்னவை குழுவின் அறிக்கை விமர்சித்துள்ளது

இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளன செயற்குழு விரைவில் கூடி, விசாரணைக்குழுவினது, அறிக்கையின் தாக்கங்கள் குறித்து ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...