15
இலங்கைசெய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

Share

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்னவுக்கு, சட்டத்தரணிகள் சம்மேளனம் ஏகமனதாக அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக, இலங்கை சட்டத்தரணிகள் நியமித்த விசேட குழு, சட்டத்தரணிகள் சம்மேளனம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை ஆகியவற்றுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது

அதில் சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் கௌசல்ய நவரத்ன, எதிர்பார்த்த வெளிப்படைத் தன்மையைப் பேணத் தவறியதாகவும், எனவே அவர் வழிநடத்தும் அமைப்பின் நம்பிக்கையை, இது மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒப்பந்த ஏற்பாடுகள் மற்றும் வளவாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நவரத்ன முதன்மையாக செயற்பட்டுள்ளார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் நியமித்த விசேட குழு கண்டறிந்துள்ளது.

அத்துடன் ஜப்பான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நிதித் தாக்கங்கள் மற்றும் பொறுப்பான முறையில், அவை நடத்தப்படுவதை உறுதி செய்ய தவறியதற்காக நவரத்னவை குழுவின் அறிக்கை விமர்சித்துள்ளது

இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளன செயற்குழு விரைவில் கூடி, விசாரணைக்குழுவினது, அறிக்கையின் தாக்கங்கள் குறித்து ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...