15
இலங்கைசெய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

Share

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்னவுக்கு, சட்டத்தரணிகள் சம்மேளனம் ஏகமனதாக அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக, இலங்கை சட்டத்தரணிகள் நியமித்த விசேட குழு, சட்டத்தரணிகள் சம்மேளனம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை ஆகியவற்றுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது

அதில் சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் கௌசல்ய நவரத்ன, எதிர்பார்த்த வெளிப்படைத் தன்மையைப் பேணத் தவறியதாகவும், எனவே அவர் வழிநடத்தும் அமைப்பின் நம்பிக்கையை, இது மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒப்பந்த ஏற்பாடுகள் மற்றும் வளவாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நவரத்ன முதன்மையாக செயற்பட்டுள்ளார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் நியமித்த விசேட குழு கண்டறிந்துள்ளது.

அத்துடன் ஜப்பான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நிதித் தாக்கங்கள் மற்றும் பொறுப்பான முறையில், அவை நடத்தப்படுவதை உறுதி செய்ய தவறியதற்காக நவரத்னவை குழுவின் அறிக்கை விமர்சித்துள்ளது

இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளன செயற்குழு விரைவில் கூடி, விசாரணைக்குழுவினது, அறிக்கையின் தாக்கங்கள் குறித்து ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...