இலங்கைசெய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

15
Share

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்னவுக்கு, சட்டத்தரணிகள் சம்மேளனம் ஏகமனதாக அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக, இலங்கை சட்டத்தரணிகள் நியமித்த விசேட குழு, சட்டத்தரணிகள் சம்மேளனம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை ஆகியவற்றுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது

அதில் சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் கௌசல்ய நவரத்ன, எதிர்பார்த்த வெளிப்படைத் தன்மையைப் பேணத் தவறியதாகவும், எனவே அவர் வழிநடத்தும் அமைப்பின் நம்பிக்கையை, இது மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒப்பந்த ஏற்பாடுகள் மற்றும் வளவாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நவரத்ன முதன்மையாக செயற்பட்டுள்ளார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் நியமித்த விசேட குழு கண்டறிந்துள்ளது.

அத்துடன் ஜப்பான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நிதித் தாக்கங்கள் மற்றும் பொறுப்பான முறையில், அவை நடத்தப்படுவதை உறுதி செய்ய தவறியதற்காக நவரத்னவை குழுவின் அறிக்கை விமர்சித்துள்ளது

இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளன செயற்குழு விரைவில் கூடி, விசாரணைக்குழுவினது, அறிக்கையின் தாக்கங்கள் குறித்து ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...