9 13
இலங்கைசெய்திகள்

நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்

Share

நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறினாலும், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறவில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததும் வரிச்சுமை குறைப்பு, எண்ணெய் விலை குறைப்பு, மின்சார கட்டணம் குறைப்பு மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறியதாகவும், ஆனால் இன்று அதில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளதாகவும், கடவுச்சீட்டு வரிசை கூட குறையவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...