9 13
இலங்கைசெய்திகள்

நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்

Share

நிவாரணத்திற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகம்: அநுரவை கடுமையாக சாடிய சஜித்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறினாலும், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறவில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததும் வரிச்சுமை குறைப்பு, எண்ணெய் விலை குறைப்பு, மின்சார கட்டணம் குறைப்பு மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறியதாகவும், ஆனால் இன்று அதில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மீண்டும் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளதாகவும், கடவுச்சீட்டு வரிசை கூட குறையவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...