2 34
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழர்கள் மீது அச்சத்தில் ஜனாதிபதி..! இராணுவத்தினரையும் புறக்கணித்ததாக விமல் குற்றச்சாட்டு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புதிய நண்பர்களான கனேடிய புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியை பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தை புறக்கணிக்க திட்டமிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தில் முதலில் கலந்துகொள்ளும் எண்ணம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருக்கவில்லை. அவர் நிகழ்வுக்கு விருப்பம் இல்லாமலே வந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர் இராணுவத்தினர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. மாறாக சிப்பாய் மற்றும் அதிகாரிகள் என்ற வார்த்தைகளை மட்டுமே அவர் பயன்படுத்தினார்.

புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி கொள்வார்கள் என்ற அச்சத்தில் தான் அவர் இராணுவத்தினர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

அத்துடன், தீவிரவாதி மற்றும் பிரிவினைவாதி போன்ற வார்த்தைகளையும் ஜனாதிபதி பயன்படுத்தவில்லை. அப்படியாயின், இராணுவத்தினர் 30 வருடங்கள் யாருடன் போர் புரிந்தார்கள்?

மேலும், போர் நடந்தது அமைதிக்காக என்ற வார்த்தையை ஜனாதிபதி பயன்படுத்தினார். அப்படியாயின் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமையும் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் அமைதிக்காக என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் மீண்டும் கலவரங்கள் உருவாகி வருவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

தெற்கில் கலவரங்கள் உருவாகி வருவதாக புலனாய்வாளர்கள் கூறியுள்ளனரா?, எனக்கு தெரிந்த வகையில் தெற்கு மக்களுக்கு கலவரத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...