2 34
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழர்கள் மீது அச்சத்தில் ஜனாதிபதி..! இராணுவத்தினரையும் புறக்கணித்ததாக விமல் குற்றச்சாட்டு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புதிய நண்பர்களான கனேடிய புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியை பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தை புறக்கணிக்க திட்டமிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தில் முதலில் கலந்துகொள்ளும் எண்ணம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருக்கவில்லை. அவர் நிகழ்வுக்கு விருப்பம் இல்லாமலே வந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர் இராணுவத்தினர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. மாறாக சிப்பாய் மற்றும் அதிகாரிகள் என்ற வார்த்தைகளை மட்டுமே அவர் பயன்படுத்தினார்.

புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி கொள்வார்கள் என்ற அச்சத்தில் தான் அவர் இராணுவத்தினர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

அத்துடன், தீவிரவாதி மற்றும் பிரிவினைவாதி போன்ற வார்த்தைகளையும் ஜனாதிபதி பயன்படுத்தவில்லை. அப்படியாயின், இராணுவத்தினர் 30 வருடங்கள் யாருடன் போர் புரிந்தார்கள்?

மேலும், போர் நடந்தது அமைதிக்காக என்ற வார்த்தையை ஜனாதிபதி பயன்படுத்தினார். அப்படியாயின் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமையும் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் அமைதிக்காக என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் மீண்டும் கலவரங்கள் உருவாகி வருவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

தெற்கில் கலவரங்கள் உருவாகி வருவதாக புலனாய்வாளர்கள் கூறியுள்ளனரா?, எனக்கு தெரிந்த வகையில் தெற்கு மக்களுக்கு கலவரத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...