2 34
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழர்கள் மீது அச்சத்தில் ஜனாதிபதி..! இராணுவத்தினரையும் புறக்கணித்ததாக விமல் குற்றச்சாட்டு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புதிய நண்பர்களான கனேடிய புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியை பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தை புறக்கணிக்க திட்டமிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தில் முதலில் கலந்துகொள்ளும் எண்ணம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருக்கவில்லை. அவர் நிகழ்வுக்கு விருப்பம் இல்லாமலே வந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர் இராணுவத்தினர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. மாறாக சிப்பாய் மற்றும் அதிகாரிகள் என்ற வார்த்தைகளை மட்டுமே அவர் பயன்படுத்தினார்.

புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி கொள்வார்கள் என்ற அச்சத்தில் தான் அவர் இராணுவத்தினர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

அத்துடன், தீவிரவாதி மற்றும் பிரிவினைவாதி போன்ற வார்த்தைகளையும் ஜனாதிபதி பயன்படுத்தவில்லை. அப்படியாயின், இராணுவத்தினர் 30 வருடங்கள் யாருடன் போர் புரிந்தார்கள்?

மேலும், போர் நடந்தது அமைதிக்காக என்ற வார்த்தையை ஜனாதிபதி பயன்படுத்தினார். அப்படியாயின் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமையும் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் அமைதிக்காக என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் மீண்டும் கலவரங்கள் உருவாகி வருவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

தெற்கில் கலவரங்கள் உருவாகி வருவதாக புலனாய்வாளர்கள் கூறியுள்ளனரா?, எனக்கு தெரிந்த வகையில் தெற்கு மக்களுக்கு கலவரத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...