8 26
இலங்கைசெய்திகள்

குவைத் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி – முதலீட்டு முறை குறித்து கலந்துரையாடல்!

Share

குவைத் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி – முதலீட்டு முறை குறித்து கலந்துரையாடல்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் அஹ்மத் அப்துல்லா அல் அஹ்மத் அல் சபாவை சந்தித்தார்.

நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை சுற்றுலாத் துறையில் முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைத் திறந்துள்ளது என்று குவைத் பிரதமர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் சந்தைகளை பன்முகப்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது. இந்த இலக்குகளை அடைவதற்கான புதிய உத்திகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதித்தனர்.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதியைப் பெறுவதில் குவைத் அரசு இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக குவைத் பிரதமருக்கு ஜனாதிபதி திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையில் சுமார் 155,000 இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்தில் வசிக்கின்றனர். அவர்கள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களுக்கு பங்களிப்பதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை கணிசமாக வலுப்படுத்துவதாகவும் அரச தலைவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிப்ரவரி 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...