2 14
இலங்கைசெய்திகள்

நீதித்துறையின் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே உள்ளது- வலியுறுத்தும் ஜனாதிபதி

Share

நீதித்துறையின் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே உள்ளது- வலியுறுத்தும் ஜனாதிபதி

நீதித்துறை அதிகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றின் நிறைவேற்று அதிகாரங்களில் நீதித்துறை தலையிடக் கூடாது என்ற தனது நீண்டகாலக் கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மகியங்கனையில் நடைபெற்ற “உறுமய” இலவச காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட “உறுமய” வேலைத்திட்டம், நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாட்டு மக்களுக்கு இலவச காணி உரிமையை முன்னரே வழங்கியிருக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் தனியார் ஹோட்டலுக்கு அரச காணியை வழங்க முடியுமானால், ஜனாதிபதி என்ற வகையில் தம்மால், ஏன் 2 மில்லியன் மக்களுக்கு காணி உரிமையை வழங்க முடியாது? ஏன்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் நீதிமன்றத்திற்கு செல்லும் என சிலர் எச்சரித்துள்ளனர். எனினும் அதிகாரம் நீதிமன்றத்திடம் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

எனவே நாடாளுமன்றத்தின் நிறைவேற்று அதிகாரத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்று தாம் எப்போதும் வலியுறுத்தி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...