இலங்கைசெய்திகள்

முடிவை அறிவித்த ஜனாதிபதி அநுர: பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

4 39
Share

முடிவை அறிவித்த ஜனாதிபதி அநுர: பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

எதிர்வரும் காலங்களில் பாதாள உலகத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) கூடிய 10வது நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்குள் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்தினுள் பாதாள உலக கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை நாட்டினுள் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் பெறும் அதிர்வலையை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட அவரின் சாரதி மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்  என மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, துப்பாக்கி சூட்டிற்கு உதவியதாக கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்வதற்காகவும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, அதற்கு பொதுமக்களின் உதவியும் காவல்துறையினரால் நாடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த சம்பவத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெறும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்து வெளியாகியுள்ளது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....