11 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடி முக்கிய பேச்சு

Share

ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடி முக்கிய பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் இந்திய(india) பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இருவரும் தற்போது இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் (HC) தெரிவித்துள்ளது.

இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயம் டிசம்பர் 15 முதல் 17 வரை நீடிக்கும். அதன்படி, இன்று (16) முன்னதாக புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திசாநாயக்கவை பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு (Draupadi Murmu) ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

முன்னதாக நேற்று(15)தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைநகர் டெல்லியை சென்றடைந்த நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...