11 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடி முக்கிய பேச்சு

Share

ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடி முக்கிய பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் இந்திய(india) பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இருவரும் தற்போது இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் (HC) தெரிவித்துள்ளது.

இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயம் டிசம்பர் 15 முதல் 17 வரை நீடிக்கும். அதன்படி, இன்று (16) முன்னதாக புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திசாநாயக்கவை பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு (Draupadi Murmu) ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

முன்னதாக நேற்று(15)தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைநகர் டெல்லியை சென்றடைந்த நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...