24 1
இலங்கைசெய்திகள்

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – ரணில் உறுதி

Share

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – ரணில் உறுதி

மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya) விளையாட்டரங்கில் நேற்று காலை (01) இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீ஬லங்கா’ ஜனாதிபதி வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ” மலையக மக்களை பொறுத்தவரையில் பலர் தற்காலிக நாட்சம்பளம் குறித்து பேசி வரும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான ஒரு நிரந்தர தீர்வு என்னும் அடிப்படையில் 1700 ரூபா சம்பளத்தினை பெற்று தந்துள்ளார்.

மேலும், மலையக மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, தற்போது வன்னி மாவட்ட பகுதிகளில் உள்ள நிலப்பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தருவார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...