nedumaran
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபாகரன் நலமுடன் உள்ளார்!!

Share

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று (13) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது . மேலும், பிரபாகரனின் குடும்பத்தாருடன் பழகி வருவதால் இந்த தகவலை அவர்களது அனுமதியுடன் சொல்வதாக பழ. நெடுமாறன் கூறினார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை இப்போது தெரிவிக்க முடியாது என்றவர் அவரது குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போர்ட் சிட்டி கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் சடலமாக மீட்பு: இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மர்ம மரணம்!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரைப்...

09 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை முறை மாற்றம்: நிரந்தர பாதுகாப்பு இனி இல்லை!

பிரித்தானியாவில் புகலிடம் கோருபவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இனி நிரந்தரமானது அல்ல என்று உள்துறைச் செயலர் ஷபானா...

08 1
செய்திகள்உலகம்

ஈரான் – இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடுவதாக ஜோர்டான் அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு...

07 1
செய்திகள்உலகம்

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு – போர் உச்சக்கட்டம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தித் தளங்களை இலக்கு...