நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு - வெளியான அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு – வெளியான அறிவிப்பு

Share

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு – வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின் தென் மாகாணத்தில் சுமார் 10 நாட்களுக்கு இரண்டு மணித்தியால மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.

எனினும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இன்றைய தினம் (11.08.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 31% ஆக குறைந்துள்ளது. சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 16% இலிருந்து 7% ஆக குறைந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் மட்டுமே மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அப்போது அவசர மின் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லையெனில் மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய காலநிலை காரணமாக குறுகிய கால மின்வெட்டு ஏற்படும். மழை பெய்யாவிட்டால் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது. தென் மாகாணத்தில் மாத்திரம் இரவு வேளையில் ஒன்றரை முதல் இரண்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தையும் அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் தேசிய அமைப்பில் இணைத்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் அனுமதி கிடைத்தால் அதியுயர் மின்சாரம் கடத்தும் பாதை அமைப்பின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை சுமார் இரண்டு வாரங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

Screenshot 2025 11 20 174232
செய்திகள்அரசியல்இலங்கை

‘போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசைதிருப்பப்படாது; எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது’ – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளிப்பு!

போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளால் அதை ஒருபோதும் தடுக்க...

25 691c5875429c2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள்: வரிச் சுமை அதிகரிப்பால் துபாய், இந்தியாவுக்குப் பயணம்!

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள் பலர், அங்குள்ள வரிச் சுமை அதிகரிப்பு மற்றும் கொள்கை...

p 2 91443317 sothebys golden toilet
செய்திகள்உலகம்

18 கரட் தங்கக் கழிப்பறை $12.1 மில்லியனுக்கு ஏலம்: சர்ச்சைக்குரிய கலைஞரின் ‘அமெரிக்கா’ சிற்பம் சாதனை விலை!

இத்தாலியக் கலைஞரான மௌரிசியோ கட்டேலன் (Maurizio Cattelan) உருவாக்கிய, 18 கரட் தங்கத்தாலான, முழுமையாகச் செயல்படும்...