rtjy 106 scaled
இலங்கைசெய்திகள்

அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்

Share

அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்

தொடரும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் மின்சார உப நிலையம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

எனினும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தாலும், தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கடும் மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூடுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு (07.10.2023) தீர்மானித்துள்ளது.

அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்காக 600 முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு போன்ற பல மாகாணங்களில் மழை பெய்துள்ளதுடன், மாத்தறை மாவட்டமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...