rtjy 106 scaled
இலங்கைசெய்திகள்

அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்

Share

அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்

தொடரும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் மின்சார உப நிலையம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

எனினும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தாலும், தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கடும் மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூடுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு (07.10.2023) தீர்மானித்துள்ளது.

அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்காக 600 முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு போன்ற பல மாகாணங்களில் மழை பெய்துள்ளதுடன், மாத்தறை மாவட்டமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...