இலங்கைசெய்திகள்

அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்

Share
rtjy 106 scaled
Share

அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்

தொடரும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் மின்சார உப நிலையம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

எனினும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தாலும், தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கடும் மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூடுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு (07.10.2023) தீர்மானித்துள்ளது.

அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்காக 600 முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு போன்ற பல மாகாணங்களில் மழை பெய்துள்ளதுடன், மாத்தறை மாவட்டமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...