tamilnaadi 113 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அபாயம்

Share

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அபாயம்

இலங்கையில் மின் விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் உஷ்ணம் காரணமாக மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் உற்பத்தி 63 சத வீதம் வரை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நாட்டு மக்களிடம் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Share
தொடர்புடையது
world 155
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளத்தில் கடும் மழை: மின்னல் தாக்கித் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது!

புத்தளம், கடையாகுளம் பகுதியில் திங்கட்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாகத் தென்னை மரம்...

world 154
செய்திகள்உலகம்

திருத்தந்தை பதினான்காம் லியோ ஆப்பிரிக்கா வருகை: அல்ஜீரியாவில் உற்சாக வரவேற்பு!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தை நேற்று...

world 151
செய்திகள்உலகம்

AI-ஐ மனைவியாகக் கருதி காதல்: அமெரிக்காவில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜொனாதன் கவாலாஸ் (Jonathan Gavalas, 36) என்ற நபர், செயற்கை...

world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...