images 15
இலங்கைசெய்திகள்

இலங்கையின் குடிவரவு சட்டத்தின் மோசமான நடைமுறை

Share

இலங்கையின் குடிவரவு சட்டத்தின் மோசமான நடைமுறை காரணமாக, இஸ்ரேல், இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர், இலங்கைக்கு வந்து, தொழில் நடவடிக்கைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இலங்கை சுற்றுலா அதிகாரிகள் இப்போது 40 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, நாட்டிற்குள் இலவச விசா நுழைவை நீடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இது, சுற்றுலாத் துறையில், அந்நியச் செலாவணி வருமானத்தை எதிர்காலத்தில் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

அத்துடன், இலங்கை மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் எதிர்பார்க்கிறது. இதற்கு மத்தியில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள அருகம்குடாவில் இதுபோன்ற வணிக மையங்களை இஸ்ரேலிய நாட்டினர் நடத்துகின்றனர்

இது சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இடமாக மாறியுள்ளது. இஸ்ரேலியர்களால் நடத்தப்படும் வணிக மையங்களில், இஸ்ரேலிய நாட்டினரின் நலனுக்காக எபிரேய மொழியில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

யூத சமூக மையமான ஒரு சபாத் ஹவுஸும் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்டபோது, அத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதில் சுற்றுலா அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதில், குடிவரவு அதிகாரிகள் விசா வழங்குவதிலும் அவற்றைச் சரிபார்ப்பதிலும் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...