3
அரசியல்இலங்கைசெய்திகள்

இரவிரவாக குருந்தூர் மலைக்கு சூனியம் வைத்த பிக்குகள்!!

Share

தொல்லியல் அகழ்வுகள் இடம்பெற்று விகாரை அமைக்கப்பட்டு வரும் முல்லைத்தீவு குமுலமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் நேற்றிரவு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க மற்றும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் 40க்கும் மேற்பட்ட பௌத்த பிக்கு உடன் இணைந்து திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு முன்னதாக சுதந்திர தின நாளான கடந்த 4ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் குழு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் குருந்தூர் மலைக்கு செல்வோம் என சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சிவாஜிலிங்கம் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் உள்ளிட்டோர் மக்களின் வாழ்வியல் உரிமை மறுக்கப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு விஜயம் செய்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

மறு நாளான நேற்று அமைச்சர்களின் திடீர் விஜயம் இடம்பெற்றுள்ளது.

மணலாறு , அரிசிமலைப் பகுதிகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் 40 பேருக்கு மேற்பட்டவர்கள் இணைந்து அமைச்சரோடு குருந்தூர் மலையில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் நள்ளிரவு வரை பிரித்ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு உள்ளனர் .
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...