1616843907595
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் விருந்தை புறக்கணித்த கூட்டமைப்பு

Share

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உரை முடிந்ததும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் ஜனாதிபதியால் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் புறக்கணித்துள்ளனர்.

” தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி எதையும் குறிப்பிடவில்லை. கொள்கைகளை விட்டுவருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். கொள்கை என்பது மக்கள் எமக்கு வழங்கிய ஆணை. அதனை மீறி செயற்படமுடியாது. எனவே, ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் அர்த்தம் புரிவில்லை.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...