1616843907595
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் விருந்தை புறக்கணித்த கூட்டமைப்பு

Share

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உரை முடிந்ததும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் ஜனாதிபதியால் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் புறக்கணித்துள்ளனர்.

” தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி எதையும் குறிப்பிடவில்லை. கொள்கைகளை விட்டுவருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். கொள்கை என்பது மக்கள் எமக்கு வழங்கிய ஆணை. அதனை மீறி செயற்படமுடியாது. எனவே, ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் அர்த்தம் புரிவில்லை.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...