275053470 619463589551506 7713850466088779799 n
அரசியல்இலங்கைசெய்திகள்

யாழ்.ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் இல்லை !!!

Share

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாகவே இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதி ஒருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம் பெற்றுள்ளது என்பதையும் அது தொடர்பான கடிதம் நமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவு படுத்துகிறோம்

எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிய நியமனம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.

அத்தோடு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளன என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை.

ஒருசில சுயலாப ஊடகவியலாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளை ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பிரசுரிப்பது அவர்களின் ஊடகத்துக்கு விரோதமான செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கெதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதற்கமைய பிரதமர் அலுவலக பிரதிநிதியாக காசிலிங்கம் கீதநாத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்ருந்தன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...