image b59796772b
அரசியல்இலங்கைசெய்திகள்

கஜேந்திரகுமார் வடக்கு, தெற்கை இணைக்க முடியாதவர் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

Share

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் போதைப் பொருட்கள் விநியோகத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினருமே ஈடுபடுவதாகக் கஜேந்திரகுமார் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், “வடக்கிலேயே அதிகளவானோர் கசிப்பு மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். அங்குள்ள தாய்மார்கள் கண்ணீர்விட்டு இதுபற்றிக் கூறுகின்றனர். போதைப்பொருளை ஒழிக்க இராணுவத்தினரும் காவல்துறையினருமே சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்,” என்று பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், நீதித்துறையிலும் சிலர் இருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதையும் அவர் நினைவுபடுத்தினார்.

அரசியல் செய்வதாகக் குற்றச்சாட்டு: “வடக்கைப் போன்று தெற்கிலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் கஜேந்திரகுமார் போன்றோர் குறைந்தது இவ்வாறான பிரச்சினைகளில் வடக்கு மற்றும் தெற்கை இணைக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்,” என பிமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டினார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...