அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!!

cb155635bce7991a12c67a66865caeee XL

தேர்தல் முறைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி இக்கலந்துரையாடல் இடம்பெறும் என தெரியவருகின்றது.

அடுத்த தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு, தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Exit mobile version