MediaFile 4 4
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்!

Share

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 இல் பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துர மதூஷிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

அந்தத் துப்பாக்கி எவ்வாறு மதூஷின் கைக்குச் சென்றது அல்லது அது எப்போது காணாமல் போனது என்பது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணையில் முறையான விளக்கம் அளிக்கத் தவறியமையால் இவர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

72 மணிநேரத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சி.ஐ.டி அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் இருந்த ஏனைய அரச துப்பாக்கிகள் குறித்தும் சி.ஐ.டி தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...