MediaFile 4 4
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்!

Share

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 இல் பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துர மதூஷிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

அந்தத் துப்பாக்கி எவ்வாறு மதூஷின் கைக்குச் சென்றது அல்லது அது எப்போது காணாமல் போனது என்பது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணையில் முறையான விளக்கம் அளிக்கத் தவறியமையால் இவர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

72 மணிநேரத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சி.ஐ.டி அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் இருந்த ஏனைய அரச துப்பாக்கிகள் குறித்தும் சி.ஐ.டி தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...