24 6694729554efa
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக்குழுக்களின் உதவியை நாடும் அரசியல்வாதிகள்

Share

பாதாள உலகக்குழுக்களின் உதவியை நாடும் அரசியல்வாதிகள்

மாகந்துறை மதுஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகளும், மதுஷுடன் தொடர்பினை வைத்திருந்த பலரும் பல்வேறு பாதாள உலகக் குழுக்களின் உதவியை நாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மாகந்துரே மதுஷிடம் பல கோடி ரூபாவை முதலீடு செய்து திருப்பித் தராமல் மோசடி செய்த குற்றச்சாட்டில் கிளப் வசந்த அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இவ்வாறு உதவியை நாடியுள்ளதாக டுபாயில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கிளப் வசந்தவின் மரணத்திற்கு பின்னர் மாகந்துறை மதுஷிடம் பணத்தை மோசடி செய்த பலர் பயந்து, கஞ்சிபானை இம்ரானிடம் தங்களை காப்பாற்றுமாறும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மாகந்துறை மதுஷின் மரணத்திற்குப் பின்னர், மதுஷின் வர்த்தக வலையமைப்பைக் கைப்பற்றி, மதுஷின் விசுவாசமான சீடர்களை கொன்று குவித்தவர்கள் அத்துருகிரிய சம்பவத்தின் பின்னர் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகந்துறை மதுஷுடன் இருந்த ரொடும்ப அமில, லொக்கு பட்டி, பொடி பட்டி போன்றவர்களின் குழுக்கள் மதுஷின் வலையமைப்பில் பணத்தினை வசூலித்து மதுஷின் கொலைக்கு பழிவாங்க ஆரம்பித்துள்ளமையினால் எதிரணியினர் அச்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...