24 6694729554efa
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக்குழுக்களின் உதவியை நாடும் அரசியல்வாதிகள்

Share

பாதாள உலகக்குழுக்களின் உதவியை நாடும் அரசியல்வாதிகள்

மாகந்துறை மதுஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகளும், மதுஷுடன் தொடர்பினை வைத்திருந்த பலரும் பல்வேறு பாதாள உலகக் குழுக்களின் உதவியை நாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மாகந்துரே மதுஷிடம் பல கோடி ரூபாவை முதலீடு செய்து திருப்பித் தராமல் மோசடி செய்த குற்றச்சாட்டில் கிளப் வசந்த அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இவ்வாறு உதவியை நாடியுள்ளதாக டுபாயில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கிளப் வசந்தவின் மரணத்திற்கு பின்னர் மாகந்துறை மதுஷிடம் பணத்தை மோசடி செய்த பலர் பயந்து, கஞ்சிபானை இம்ரானிடம் தங்களை காப்பாற்றுமாறும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மாகந்துறை மதுஷின் மரணத்திற்குப் பின்னர், மதுஷின் வர்த்தக வலையமைப்பைக் கைப்பற்றி, மதுஷின் விசுவாசமான சீடர்களை கொன்று குவித்தவர்கள் அத்துருகிரிய சம்பவத்தின் பின்னர் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகந்துறை மதுஷுடன் இருந்த ரொடும்ப அமில, லொக்கு பட்டி, பொடி பட்டி போன்றவர்களின் குழுக்கள் மதுஷின் வலையமைப்பில் பணத்தினை வசூலித்து மதுஷின் கொலைக்கு பழிவாங்க ஆரம்பித்துள்ளமையினால் எதிரணியினர் அச்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...