24 66541e51d2a09
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களை மீட்க எதிர்க்கட்சியினர் தாய்லாந்துக்கு விஜயம்

Share

இலங்கையர்களை மீட்க எதிர்க்கட்சியினர் தாய்லாந்துக்கு விஜயம்

மியன்மாரில் (Myanmar) இணையவழி குற்ற முகாம்களில் சிக்கியுள்ள இலங்கையர்களையும், ரஸ்ய – உக்ரைன் (Russia – Ukarine) போர் முனையில் சிக்கியுள்ள இலங்கை படையினரையும் மீட்கும் நோக்கில் மூன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாய்லாந்துக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார (Vasantha Yappa Bandara), ஜே.சி. அலவத்துவல (J.C. Alawathuwala) மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா (Sujith Sanjaya Perera) ஆகியோரை உள்ளடக்கிய தூதுக்குழுவே இன்று (27.05.2024) அதிகாலை தாய்லாந்துக்கு (Thailand) சென்றுள்ளது.

இந்நிலையில், குறித்த குழுவானது பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கும் அவர்களை நாடு திரும்புவதற்கும் என இராஜதந்திரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளது.

இதன்போது, இந்த குழுவினர் மியன்மார் மற்றும் ரஸ்யாவில் தலா ஐந்து நாட்கள் தங்கியிருப்பார்கள்.

அதேவேளை, தமது பயணத்தின் போது, தாய்லாந்து மற்றும் மியன்மாரின் சங்க நாயக்க தேரர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளையும் சந்தித்து மகாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களையும் கையளிக்கவுள்ளனர்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...