24 66541e51d2a09
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களை மீட்க எதிர்க்கட்சியினர் தாய்லாந்துக்கு விஜயம்

Share

இலங்கையர்களை மீட்க எதிர்க்கட்சியினர் தாய்லாந்துக்கு விஜயம்

மியன்மாரில் (Myanmar) இணையவழி குற்ற முகாம்களில் சிக்கியுள்ள இலங்கையர்களையும், ரஸ்ய – உக்ரைன் (Russia – Ukarine) போர் முனையில் சிக்கியுள்ள இலங்கை படையினரையும் மீட்கும் நோக்கில் மூன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாய்லாந்துக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார (Vasantha Yappa Bandara), ஜே.சி. அலவத்துவல (J.C. Alawathuwala) மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா (Sujith Sanjaya Perera) ஆகியோரை உள்ளடக்கிய தூதுக்குழுவே இன்று (27.05.2024) அதிகாலை தாய்லாந்துக்கு (Thailand) சென்றுள்ளது.

இந்நிலையில், குறித்த குழுவானது பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கும் அவர்களை நாடு திரும்புவதற்கும் என இராஜதந்திரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளது.

இதன்போது, இந்த குழுவினர் மியன்மார் மற்றும் ரஸ்யாவில் தலா ஐந்து நாட்கள் தங்கியிருப்பார்கள்.

அதேவேளை, தமது பயணத்தின் போது, தாய்லாந்து மற்றும் மியன்மாரின் சங்க நாயக்க தேரர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளையும் சந்தித்து மகாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களையும் கையளிக்கவுள்ளனர்.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...