7 11
இலங்கைசெய்திகள்

தோட்ட பங்களா ஒன்றை பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டுள்ள வடக்கு அரசியல்வாதி

Share

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஒருவர், மத்திய மலைநாட்டின் பெருந்தோட்ட முகாமைத்துவமொன்றுக்கு உரித்தான தோட்ட பங்களா ஒன்றை பலவந்தமாக கைப்பற்றிக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான கரோலினா தோட்டம், தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன் வெளிக்கள அதிகாரி தங்கியிருந்த பங்களா ஒன்றையே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்.

குறித்த கரோலினா தோட்டத்தை அண்மித்த காணித் துண்டொன்று தொடர்பில் வடக்கு முன்னாள் முதலமைச்சர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்தக் காணித்துண்டுக்கு உரிய இடம் என்று உரிமை கோரியே மேற்குறித்த பெருந்தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரின் பங்களாவையும் அவர் கைப்பற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு இது தொடர்பான விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...