sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் சூதாட்டத்தால் ஆபத்தில் ’21’ திருத்தம்! – சஜித் சுட்டிக்காட்டு

Share

“ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமலாக்கி அந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்குப் பாரப்படுத்தும் வகையிலான 21ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது ஆடப்படுகின்ற அரசியல் சூதாட்டத்தின் காரணமாகவே 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆபத்து நிகழ்ந்திருக்கின்றது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,

“நீதி அமைச்சரின் 21 ஆவது திருத்தம், அரசின் 21 ஆவது திருத்தம், எதிர்க்கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை. ரஞ்சித் மத்தும பண்டாரவால் தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்ட 21 ஆவது திருத்தம் மாத்திரமே தற்போதுள்ள ஒரே ஒரு திருத்தமாகும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாரத்தில் அது குறித்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

எவ்வாறாயினும், இந்நாடு சீர்திருத்தங்களைவிட அரசியல் விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் இது பற்றி விவாதிக்கப்படாத இரண்டாம் பட்ச கவனிப்பே இருக்கின்றது.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு மக்களின் புதிய ஆணையிலேயே தங்கியுள்ளது.

இந்த நெருக்கடிக்கு சில மாதங்களில் தீர்வு கிடைக்கும் எனச் சில வீரர்கள் பெருமை பேசினாலும்கூட, உண்மையான நிலைப்பாடு அவ்வாறு இல்லை.

புதிய சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு சகல தரப்புகளினதும் யோசனைகள் இன்றியமையாதது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...