tamilni 478 scaled
இலங்கைசெய்திகள்

என்றுமில்லாதவாறு களமிறங்கும் அரசியல் கூட்டணிகள்

Share

இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது இல்லாத அளவு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன.

அதேபோல் இம்முறை மும்முனைப் போட்டி பலமாக இருக்கும் எனவும், 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு பிரதான வேட்பாளர்கள் முழு வீச்சுடன் செயற்பட வேண்டிவரும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2024 ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தேர்தலை இலக்கு வைத்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதன்படி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, கூட்டணியில் உள்ள கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் அதிகரிப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.

மறுபுறத்தில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் தமது கூட்டணியை விஸ்தரித்தே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பரந்தபட்ட கூட்டணியை அமைப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றது. நிமல் லான்சா, சுசில் பிரேமஜயந்த உட்பட மொட்டுக் கட்சியில் இருந்து விலகிய சில எம்.பிக்கள் இணைந்து புதிய கூட்டணி எனும் பெயரில் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர்.

இக்கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் பரந்தபட்ட கூட்டணிக்கான அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பிக்க ரணவக்க தலைமையிலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், விமல் வீரவன்ச தலைமையிலும், ரொஷான் ரணசிங்க தலைமையிலும் ஏற்கனவே கூட்டணிகள் உதயமாகியுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிகளில் பெரும்பாலான கூட்டணிகள் அரச தரப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறு கூட்டணிகள் உருவாகவில்லை எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும் இக்கூட்டணிகள் ஆசன ஒதுக்கீட்டுகளின் அடிப்படையில் அரசியல் முடிவுகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...