சமீபத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகச் சில பகுதிகளில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அவற்றை வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது, வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருகின்றன.
இந்த நிலைமையானது, தொலைத்தொடர்பு வசதிகளை விரைவாக வழமைக்குத் திருப்புவதற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாகப் பொலிஸார் பொதுமக்கள் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளனர், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல், அவற்றை வெட்டி அகற்றுதல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது அதன் கட்டமைப்புகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனர்த்தங்களுக்கு உள்ளான வீதியொன்றைப் புனரமைக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான நிலத்தடித் தொலைத்தொடர்பு வயர்கள் தென்பட்டால், அது குறித்து உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.