MediaFile 2 3
இலங்கைசெய்திகள்

சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் – பொலிஸார் எச்சரிக்கை!

Share

சமீபத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகச் சில பகுதிகளில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அவற்றை வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது, வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலைமையானது, தொலைத்தொடர்பு வசதிகளை விரைவாக வழமைக்குத் திருப்புவதற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாகப் பொலிஸார் பொதுமக்கள் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளனர், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல், அவற்றை வெட்டி அகற்றுதல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது அதன் கட்டமைப்புகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனர்த்தங்களுக்கு உள்ளான வீதியொன்றைப் புனரமைக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான நிலத்தடித் தொலைத்தொடர்பு வயர்கள் தென்பட்டால், அது குறித்து உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...