rtjy 128 scaled
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Share

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பண்டிகை காலங்களில் விருந்துகளுக்கு செல்பவர்கள் சாரதியை அழைத்துச் செல்லுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறு சாரதி இல்லாத பட்சத்தில் வாடகை வாகனத்தில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 21312 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துகளில் 2163 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5296 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இம்மாதம் கடந்த 4 நாட்களில் 2427 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 232 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 69405094615b9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தல்: திருமணமான தம்பதியர் உட்பட ஐவர், ஐஸ் மற்றும் வாள்களுடன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்...

95570777 trainafp
இலங்கைசெய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்: விடுமுறை மற்றும் பரீட்சை காரணமாக பாடசாலைகள் மூடப்படும் திகதிகள் அறிவிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பல பாடசாலைகள் இன்று (டிசம்பர் 16) மீண்டும் கல்வி...

95570777 trainafp
செய்திகள்

கிழக்கு ரயில் தண்டவாளத்தில் சேவை மீண்டும் ஆரம்பம்: 18 நாட்களுக்குப் பிறகு சீன விரிகுடாவிலிருந்து சீதுவா நோக்கிப் புறப்பட்டது முதல் சரக்கு ரயில்!

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்களில் பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்த 18 நாட்களுக்குப் பிறகு, இன்று...

919387 00900779
இலங்கைசெய்திகள்

நெல் இருப்பை அரிசியாக்கி சந்தையில் விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் யோசனைக்கு அமைச்சரவை...