tamilni 429 scaled
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

Share

சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், டிசெம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு வாகன சாரதிகள் தொடர்பான விசேட நடவடிக்கையை போக்குவரத்து பொலிஸார் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,427 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 232 பேரும், வேகமாக வாகனம் ஓட்டிய 235 பேரும் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...