இலங்கைசெய்திகள்

உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

Share

மாத்தறையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையை மீறி சென்ற காரை நிறுத்துமாறு பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் உத்தரவை மீறி கார் தொடர்ந்து பயணித்துள்ளது.

இதன்போது ​​பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற கார், மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் இரண்டு பேர் பயணித்த நிலையில் காரை நிறுத்திவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...