6 6
இலங்கைசெய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை வைத்து தேர்தல் பிரசாரம்! பொலிஸார் விசாரணை

Share

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு துண்டு பிரசுரங்கள் வாங்கிய மக்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்கள்.

இதேவேளை குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதுவரை அவர் எந்தவித தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை வேட்பாளரின் இந்த செயற்பாட்டுக்கு ஏனைய கட்சிகளும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...