பண்டிகைக் காலங்களில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ரோந்து பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 147 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 11,162 வாகனங்களும், 15,685 நபர்களும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews
Leave a comment