14 12
இலங்கைசெய்திகள்

திடீரென மாயமான பொலிஸ் அதிகாரி! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்Sri Lanka Police, news,

Share

திடீரென மாயமான பொலிஸ் அதிகாரி! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்Sri Lanka Police, news,

டி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரிடமிருந்த துப்பாக்கிகள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த துப்பாக்கிகளை அவர் வேறு யாரிடமாவது ஒப்படைத்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மவுண்ட் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள், இரவு வீதித்தடை கடமைக்காக T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர், அவர் கடமை நிலையத்திற்கு எந்த வித தகவலையும் வழங்கவில்லை என்பதோடு அவரின் அலைபேசிக்கு அழைக்க முயன்றும் அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் சந்தேகநபர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் – ஹலம்பகஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர் டுபாய்க்கு தப்பிச் செல்வதற்கு முன்னர் குறித்த துப்பாக்கியை பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், பொலிஸார் அவரின் உறவினர்களிடம் பெற்ற வாக்குமூலத்தில் அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...