24 664ebd7029848
இலங்கைசெய்திகள்

சிற்றுண்டிச்சாலைக்குள் பொலிஸ் அதிகாரியால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Share

சிற்றுண்டிச்சாலைக்குள் பொலிஸ் அதிகாரியால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

பிங்கிரிய சிற்றுண்டிச்சாலைக்குள் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த உணவகத்தை இந்த அதிகாரியே நடத்தி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

பிங்கிரிய பொலிஸ் பணிக்காக வந்த 50 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸ் கான்ஸ்டபிள் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவரை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...