24 664ebd7029848
இலங்கைசெய்திகள்

சிற்றுண்டிச்சாலைக்குள் பொலிஸ் அதிகாரியால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Share

சிற்றுண்டிச்சாலைக்குள் பொலிஸ் அதிகாரியால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

பிங்கிரிய சிற்றுண்டிச்சாலைக்குள் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த உணவகத்தை இந்த அதிகாரியே நடத்தி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

பிங்கிரிய பொலிஸ் பணிக்காக வந்த 50 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸ் கான்ஸ்டபிள் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவரை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...