இலங்கைசெய்திகள்

மாவீரர் நினைவேந்தல் : தொடரப்போகும் கைதுகள்

Share
19 9
Share

மாவீரர் நினைவேந்தல் : தொடரப்போகும் கைதுகள்

வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏழு சட்டவிரோத மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால(Tilak Dhanapala) கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களை கைது செய்வதற்கு வசதியாக அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்த நபர்கள் குறித்த அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்த ஏழு நிகழ்வுகளில் நான்கு நிகழ்வுகள் பருத்தித்துறை(point pedro) பிரதேசத்திலும், இரண்டு கிளிநொச்சியிலும்(kilinochchi), ஒன்று யாழ்ப்பாணத்திலும்(jaffna) இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏற்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்கள் காணொளிப் பதிவுகள் மற்றும் தகவலறிந்தவர்கள் மூலம் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிடியாணையை பெறுவதற்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களிலும் காவல்துறையினர் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால்( Shivajilingam) ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...