1 6
இலங்கைசெய்திகள்

பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா.. கொழும்பில் விசேட பாதுகாப்பு வளையம்

Share

கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் வாகனத்தில் இருந்து இறங்கியது தொடக்கம், மேடையில் ஏறி, மீண்டும் வாகனத்தில் ஏறும் வரை விசேட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தார்.

மேடையில் உரையாற்றும் போது அதற்கான காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி, முன்னொரு காலத்தில் தெமட்டகொடை என்பது பாதாள உலகக்கும்பல்கள் கோலோச்சிய, போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆதிக்கம் செலுத்திய பிரதேசமாகும்.

அதன் காரணமாகவே எனக்கு இன்று விசேட பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு எனக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தெமட்டகொடை என்பதற்காக அவ்வாறு பாதுகாப்பு வழங்குவதற்கு நேர்ந்துள்ளமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். அந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் கருத்து வௌியிட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...